I AM SAM
Monday, December 13, 2010
I AM SAM
Monday, October 25, 2010
நானும் ஒரு கிறிஸ்தவன்.....
Wednesday, August 18, 2010
திருமணம்.......
கோவில் வாசல்..
"அம்மா தாயே வேலை கிடைச்சு ரொம்ப வருஷம் போயாச்சு, சொட்டை விழுகுது, மகராசி நல்லா இருப்பீங்க,பொண்ணு கொடுங்கம்மா...அம்மா தாயே.."
சட்டென்று கண்விழித்தான் கணேஷ்.. மொபைல் போன்ல மணி பார்த்தான் காலை 06:00 மணி...ஐயோ என்ன ஒரு கனவு....இப்படி கேவலமா எல்லாம் கனவு வருது என.பல் துலக்கிகொண்டே நினைத்து பார்த்தான்..."எத்தன பொண்ணுங்கள பாத்தாச்சு..அவுங்களுக்கு பிடிச்சா எனக்கு பிடிக்க மாட்டேங்குது..எனக்கு பிடிச்சா அவுங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது....என்ன கல்யாணமோ!!!"
"தம்பி வணக்கம்" குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான் கணேஷ்....
"யோவ் யாருய்யா நீ..எப்படி வீட்டுக்குள்ள வந்த..என்ன மாதிரியே இருக்க..."
"கணேஷ்..நீ சினிமா எல்லாம் பாக்குறது இல்ல...நீ 1982 ல தான ரிலீஸ் ஆன..அட உன் year of birth எ சொன்னேன்பா அந்த காலத்து படம் எல்லாம் பாத்து இல்ல..நான் தான் உன்னோட மனசாட்சி..கணேஷ்2"
கணேஷ்2: இல்லப்பா ரொம்ப வருத்தமா இருக்கியே அதான் என்கூட கொஞ்சம் ஷேர் பண்ணு...உன் வருத்தம் குறையும்...
கணேஷ்: போடா டேய்....என் டைம் வேஸ்ட் பண்ணாத..ஆண்கள பார்த்தாலே இப்ப எல்லாம் எரிச்சலா வருது !!!!
கணேஷ்2: ஹஹாஹ்..உன் வருத்தம் எனக்கு புரியுது..ஆனா கல்யாணத்த பத்தி நீ ஆண் கூட தான் பேசணும்..."திரு"மணம் தான் இருக்கு..."திருமதி"மணம் நா இருக்கு...share with me dude..
கணேஷ்: என்னத்தய்யா சொல்றது....என்ன arranged marriage ஒரே சொதப்பல்...ஒன்னும் சரியா அமைய மாட்டேங்குது..எனக்கு வர போற மனைவி இப்படிதான் இருக்கணும்னு நான் நினைக்கிறது என்னய்யா தப்பு ..இது வாழ்க்கை இதுல compromise பண்ணிட்டு போக முடியாது....பேசாம லவ் பண்ணிருக்கலாம்...
கணேஷ் 2: மச்சி...லவ் வேண்டாம்டா....இளம் வயதில ஒரு ஆண்மகனோட லைப் ல வரக்கூடாதது ரெண்டு ஒன்னு "sugar" இன்னொன்னு "figure".காதல் ரொம்ப ஆபத்தான வியாபாரம்...என்னடா வியாபாரம் சொல்றேன்னு பாக்குறியா...ஆமாம்பா ...நீ உன் இதயத்த அடகு வச்சு காதல் வாங்குவ...அத அந்த பொண்ணுகிட்ட நீ விக்கணும்...அட உன் காதல சொல்லணும்..உன்ன இவ்ளோ லவ் பண்றேன்..அவ்ளோ பண்றேன் நு விவரிக்கணும்....நீ வெற்றி அடைஞ்சா லாபம் உன்னோட காதல் அந்த பொண்ணுக்கு போய் நீங்க ரெண்டு பேரும் சேந்து இருப்பீங்க..ஆனா தோல்வி அடைந்தால் உன்னோட காதல் உன்கிட்டயே இருக்கும்...நீ அடகு வச்ச இதயத்தையும் உன்னால மூட்ட முடியாது.....பேசாம அந்த ஐடியா வேண்டாம்...உனக்கு ஒத்து வராது ...
கணேஷ்: arranged marriage அத விட மோசம்.....எனக்கு இது வரைக்கும் ஒரு பொண்ண கூட பிடிக்கல...ஒரே மதம் , ஒரே இனம் இப்படி பல விஷயங்கள் இருக்கு ...அத தாண்டியும் போக முடியல...
கணேஷ்2: டேய் ..அது அப்படி தாண்ட..பொண்ணு நல்ல குடும்பத்து பொண்ணா..நல்ல குணமா...அதான்டா முக்கியம்...உன் அம்மா அப்பா எந்த பொண்ண பாத்து சொல்றாங்களோ அந்த பொண்ண பேசாம கல்யாணம் பண்ணிக்கோ...அழகு எல்லாம் முக்கியம் இல்ல..
கணேஷ்: ஆஹா நல்ல இருக்கே நீ பேசறது...உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன்...மவனே கேட்டுட்டு என் டைம் வேஸ்ட் பண்ணாம ஓடிடு...இப்ப நான் ஒரு கடைக்கு போறேன் எனக்கு shirt வாங்க போறேன்....ஆனா jeans pant எடுத்துக்க சொல்லி வற்புருதுறாங்க..எனக்கு jeans தேவை இல்ல...சரி கொடுக்குறிய நல்ல levi's ஜீன்ஸ் எ கொடு...நீயா கொடுக்குறேன்னு சொல்ற அப்பா நல்ல branded எ கொடு...இப்படி கேக்குறது தப்பா ....நீயே சொல்டா மண்டையா!!!
கணேஷ்2: ஓஹோ அப்ப கல்யாணம் பண்ண ,நீ விரும்புற மாதிரி எல்லா குணங்களும் இருக்கணும்....top branded levi's jeans கேக்குற..ordinary jeans வேண்டாம் ...ஒன்னே ஒன்னு கேக்குறேன்....உன்கிட்ட இருக்காதே 400 rs.. நீ என்ன தைரியத்துல levi's jeans கேக்குற...எதோ அவுங்கள பாது கொடுக்குராங்களே...அதுல எது நலல்த அத எடுக்கணும்..
கணேஷ்: ஒத்துக்கிறேன் மண்டையா நான் அழகு இல்லைதான்.....இருந்தாலும் என்னோட கொள்கைய நான் விட்டு கொடுக்க முடியாது ..... கொண்ட கொள்கைக்காக உயிரையே கொடுக்கிறவன் நான்... சுருக்கமா சொன்ன நான் புலி,பசிச்சாலும் புல்ல தின்ன மாட்டேன்....
கணேஷ்2: ஓஹோ, சரி கனவு ஒன்னு கண்டியே எத்தன மணிக்கு அது ???
கணேஷ்: விடிய காலை 06:00 மணி...ஏன் ?
கணேஷ்2: சரிதான் ....next கோவில் ல meet பண்றேன்..... bye...all the best...............
Wednesday, May 12, 2010
நேற்றைய செய்தி - பாகம் 2
Tuesday, May 11, 2010
நேற்றைய செய்தி - பாகம் 1
Monday, May 3, 2010
சுறா - திரை விமர்சனம்
Sunday, January 17, 2010
பெண்
இதன் நோக்கம் பெண்களின் உரிமை பற்றி விவாதிப்பது அன்று. எனக்கு தெரிந்த எதிர்கொண்ட சில தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வதே.......ஏதும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டி மன்னிக்கவும்...
Tuesday, January 5, 2010
திரைப்படம்
நட்புத் தோல்வி...
" A Friend is a person who knows you well,with whom you can have affection and trust, and with whom you can feel the comfortableness..."
மேற்கூறியவைகளில் ஒன்று குறை படும்போதோ அல்லது அவைகளுக்கு அப்பாற்பட்டு சில குறைப்படும்போதோ அடைவது நட்புத் தோல்வியா?
தேடிச் சென்று அடையகூடியது அல்ல நட்பு, நட்பு என்கிற உணர்வு இரு மனிதர்களிடையே, இருவருக்கும் மற்றவர் பால் தோன்றக்கூடியது.இவ்வுணர்வு ஒருவரிடம் குறைப்படும்போது மற்றவர்க்கு அது நட்புத் தோல்வியா? அல்லது அவ்வுணர்வு தான் மற்றவரிடம் கொண்டது போல் மற்றவர் தன்பால் கொள்ளாததை அறிய வரும்போது அடைவது நட்புத் தோல்வியா?
மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியும் நிகழும் நிகழ்வுகளை நன்கு உணரக்கூடிய பருவம் (Maturedness) எய்தும் போது, அவனிடம் அன்பு எடை போட்டு உபயோகப் படுகிறது... அன்பு செலுத்தும் முன் இதயத்திற்கு முன்பு மூளையைத் துணையாகக் கொள்கிறான்...இது சரியா தவறா என்கிற வாதத்தை விட, அத்தகைய மனிதனுக்கு தோல்விகள் பகையாளிகள் ஆகின்றன என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இவ்வாறில்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் உரிமையோடும் நம்பிக்கையோடும் மற்றவரிடம் பகிரும் போது, மற்றவர் தன்னையல்லாமல் வேறொருவரிடம் அங்ஙனம் பழகுவதை உணருவது நட்புத் தோல்வியா ?
இல்லை தான் நண்பராக நினைப்பவரிடம் செலுத்தும் அன்பில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது அடைவது நட்புத் தோல்வியா?
மேற்கூறிய அல்லது மேற்பிதற்றியவைகளின் மூலம் அடைவது நட்புத் தோல்வியா? அன்பை திரும்ப பெறாமல் கொடுத்துகொண்டே இருக்க நட்பால் ஆகுமா ? அங்ஙனம் நிகழ்ந்தால் அது நட்பாகுமா ?
மனிதனுக்கு எட்டாதவைகள் பல உண்டு என்பார்கள், அவற்றுள் ஒன்றாய் இதை நான் எடுத்துக்கொள்கிறேன்....