Tuesday, May 11, 2010

நேற்றைய செய்தி - பாகம் 1

இந்தச் சிறுகதையில் கூறப்படும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே.....

ஜூன் 15 2009 - St.Steven's Hospital,சென்னை --- மாலை 6 மணி.....
Dr.ஞானராஜசேகரன் - M.D,F.R.C.S (Xenograft Specialist) அறைக்கதவு தட்டப்படுகிறது.
"yes, Come in". டாக்டர் என் பெயர் தீபா உங்க கூட நேத்து போன்ல
பேசுனேன்ல..இன்னைக்கு வந்து பாக்க சொன்னீங்க..
"oh deepa, yes yes...i forgot..the famous reporter of Indian Mail huh...சொல்லுங்க interview
start பண்ணலாம்"
" டாக்டர் நீங்க ரொம்ப successful-a பண்ண heart transplantதான் இப்ப hot topic. நீங்க பல
interviews கொடுத்துக் கலைச்சு போயிருப்பீங்க.. i dont want to eat your time more.
எல்லாரும் நீங்க பண்ண சாதனைய பத்தி பேசுறாங்க..எனக்கு நீங்க அடுத்து என்ன
பண்ண போறீங்க. to what are you going towards doctor ? please can you explain me ? "
"என்னோட அடுத்த சாதனை brain transplant"
"ஆனா டாக்டர் அது சாத்தியமா....எனக்கும் கொஞ்சம் மருத்துவ செய்திகள் தெரியும்..
அப்படியே brain transplant பண்ணாலும் டார்கெட் body-la உள்ள nerves support
பண்ணுமா ? spinal cord linkage proper ஆ இருக்குமா ?.it would be a big mess னு
எனக்கு தோணுது...."
"excellent deepa...u know many things... முடியாது னு சொல்றத முடிச்சு காட்டுறது
தான சாதனை ஹ்ம்...give me some time..and you guys wait for some time..
will give you all a very shocking n pleasant news.... நான் அவசரமா ஒரு meeting
போகணும் நம்ம interview முடிச்சுக்கலாமா ?? "
"Sure Doctor...thanks for your time....All the very best for your efforts.."

செப்டம்பர் 5 2009 - சேவியோ பாலம்,சேலம் --- இரவு 11:30 மணி
"யோவ் constable ambulance வந்திருச்சு சீக்கிரம் ஏத்து.. இன்னும் உசிரு
இருக்கு...சீக்கிரம் சீக்கிரம்...hospital கொண்டு போங்க...யாருய்யா எனக்கு
தகவல் சொன்னது ?"
" நான் தாங்க....என் பேரு பெருமாள்...நான் இந்த பாலத்துக்கு கீழ தாங்க தினமும்
தூங்குவேன்...இன்னைக்கு தூங்கலாம்னு படுத்தப்ப, இந்த
பொண்ணு பாலத்துக்கு மேல இருந்து கீழ குதிக்க போனுச்சுங்க.. நான் கத்துனேன்
..ஆனா அதுக்குள்ள....."
"நல்ல வேளை நான் சரியாய் ரோந்து வந்தேன்...இல்லனாஅந்த பொண்ணு உசிரு
போயிருக்கும்..சரி ஸ்டேஷன் வந்து statement எழுதி கொடுத்திட்டு போ..."
"Inspector Sir, hospital ல இருந்து போன்..அந்த பொண்ணு செத்து போச்சாங்க...."

நவம்பர் 11 2009 - ABC Infotech Limited, சென்னை --- காலை 10 மணி
" டேய் மச்சி, இன்னைக்கு நம்ம ஆபீஸ் ல ஒரு பொண்ணு join பண்றாடா ....நம்ம
recruitment HR பய புள்ளைகிட்ட கேட்டேன்... super ஆ இருப்பாலாம்டா...நம்ம டீம்
ஆ இருந்தா சூப்பர் ஆ இருக்கும்..."
"கணேஷ், இன்னைக்கு நம்ம டீம் ல சௌம்யா னு ஒரு பொண்ணு join
பண்ணுறா...நம்ம ப்ராஜெக்ட் பத்தி ஒரு induction manual prepare
பண்ணுங்க...you will be the mentor for her ok ??? "
" Ok ஸ்ரீனி, i will do that..."
"டேய் மச்சி எங்கப்பன் எனக்கு யோகேஷ் னு பேரு மட்டும்தான் வச்சான்...ஆனா
கொஞ்சம் கூட யோகம் இல்ல..உனக்கு அடிக்குதுடா யோகம்..."
"டேய் ஏன்டா இப்படி அலையிற..அந்த பொண்ணு எப்படி இருப்பான்னு கூட நமக்கு
தெரியாது...வேலைய பாருடா முதல்ல..first induction manual template send
பண்ணு.."
"Are you Mr.Ganesh, Hi I am nandhini.. Srinivasan asked me to meet you"
கணேஷ் க்கு அப்படியே தூக்கி வாரி போட்டது...என்ன ஒரு அழகு ...நிஜமாவே தான்
யோக காரன் என ண்ணிக் கொண்டான்...அப்படியே வாரணம் ஆயிரம் சூரியா train ல
சமீரா ரெட்டி பாக்கும் போது செய்யிற மாதிரி பல செய்கைகள் செய்யணும்னு
தோணுது...
"Hi Nandhini, Welcome to our team....."


தொடரும்.........
நன்றி
தரன்....

3 comments:

  1. hey ranjit

    nalla irukku unnga toguppu..
    part 2 eppo varum??
    pls post ok i keep reading.
    congrats for the very first venture

    ReplyDelete
  2. dei...enada ...pulp fiction inge aramchirukaya........
    mudikumpbothu urupadiya mudikala mavane ne setahda..

    ReplyDelete
  3. முதல் பாகம் விறுவிருப்பாய் இருக்கிறது!

    ReplyDelete